சனி, 13 அக்டோபர், 2012

வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் தீ - மக்கள் மகிழ்ச்சி

நேற்று இரவு வீரவநல்லூர் துணை மின் நிலையத்தின் மின் மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது. இதெல்லாம் ஒரு செய்தியா? நாங்கெல்லாம் 8 மணி நேரம் தொடர்ந்து பவர் கட் ஆனாலே தாங்குவோம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. உண்மையான (இனிப்பான) செய்தி இனிமேல் தான் வருகிறது. தொடர்ந்து படியுங்கள். அந்த விபத்தைப் பற்றியும் அதைத் தொடர்ந்து இன்று காலை வரை மின் விநியோகம் இருக்காது என்றும் நம் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். அந்த விபத்தில் ஏற்பட்ட பழுதுகளை மின் வாரிய பணியாளர்கள் மிக துரிதமாக செயல்பட்டு, வெகு விரைவாக பழுதுகளை நீக்கி இரவு 1.30 மணிக்கெல்லாம் மின்சாரம் வழங்கிவிட்டனர். ஆனால் அந்த விபத்தில்  மின்சாரத்தை துண்டித்து மீண்டும் இயக்கும் பட்டன்கள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன. இதானால் நமக்கு கல்லூரிலிருந்து நேரடியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பிரச்சனை சரியாக 2 அல்லது 3 நாட்கள் ஆகுமென்பதால் நமக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 26 செப்டம்பர், 2012

வந்தாச்சு நம்ம ஊருக்கு ரயில் வண்டி


நெல்லை மாவட்ட மக்களின் 3 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறியது! ஆம், 220 கோடி செலவில் 2009 ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்த  நெல்லை - தென்காசி அகல ரயில் பாதை பணிகள் முடிவடைத்து கடந்த வெள்ளிக் கிழமை (21 செப்) ரயில் சேவைகள் தொடங்கின. இந்நிகழ்வை அடுத்து ஒவ்வொரு நிறுத்ததிலும் பட்டாசுகள் வெடித்தும், வாத்தியங்களை வாசித்தும், ரயில்வே பணியாளர்களுக்கு மாலை அணிவித்தும் மக்கள் வெகு விமரிசையாக ரயிலை வரவேற்றனர்.  பேருந்துக் கட்டணத்தை விட ரயில் கட்டணம் மிக மிகக் குறைவு என்பதால் வீரவநல்லூர் மக்கள் உட்பட அனைத்து நெல்லைவாசிகளும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இனி பேருந்துகளில் கூட்டம் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் நெல்லை சந்திப்பில் இருந்து வீரவநல்லூருக்கு 34 நிமிடங்களும் அங்கிருந்து தென்காசிக்கு 1 மணி 20 நிமிடங்களும் மட்டுமே ஆகுமென்பதால் நேரமும் மிச்சமாகும்.

செங்கோட்டை திருநெல்வேலி பயணிகள் ரயில் எண் 56796:
இந்த ரயில் காலை 6.30 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு தென்காசி(6:41), ஆழ்வார்குறிச்சி(7:16), அம்பாசமுத்திரம்(7:31), கல்லிடைக்குறிச்சி(7:39) வழியாக வீரவநல்லூர் (7:46) வந்து பின் 8:45 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.

திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் எண் 56797:
இந்த ரயில் காலை 9.30  மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு நெல்லை நகரம்(9:34) , பேட்டை(9:39), சேரன்மகாதேவி(9:49)  வழியாக வீரவநல்லூர் (9:56) வந்து பின் 11.03 மணிக்கு தென்காசியை சென்றடைந்து அங்கிருத்து 11.05 க்கு புறப்பட்டு சரியாக 11.45 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

செங்கோட்டை திருநெல்வேலி பயணிகள் ரயில் எண் 56798:
மேற்சொன்ன அதே ரயில், 56798 என்ற பெயரில் செங்கோட்டையிலிருந்து மீண்டும் 3.15pm க்கு (15.15) புறப்பட்டு தென்காசி(3.26pm), ஆழ்வார்குறிச்சி(4pm), அம்பாசமுத்திரம்(4:16pm), கல்லிடைக்குறிச்சி(4:22pm) வழியாக வீரவநல்லூர் (4:30) வந்து பின் மாலை 5:30(17:30) மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.

திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் எண் 56799:
இந்த ரயில்  (56799 என்று பெயர் மாற்றம் செய்யப்பட 56796 ரயில்) மாலை 6.20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு நெல்லை நகரம்(6.24pm) , பேட்டை(6.29pm), சேரன்மஹாதேவி(6.39pm)  வழியாக வீரவநல்லூர் (6:47pm) வந்து பின் சரியாக இரவு 8.35 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

கட்டண விவரங்கள்:

FromToFare
திருநெல்வேலிபேட்டைரூ.2
திருநெல்வேலிசேரைரூ.3
திருநெல்வேலிவீரவநல்லூர்ரூ.4
திருநெல்வேலிஅம்பைரூ.5
திருநெல்வேலிகடையம் ரூ.8
திருநெல்வேலிபாவூர்ரூ.10
திருநெல்வேலிதென்காசிரூ.12
திருநெல்வேலிசெங்கோட்டைரூ.13
வீரவநல்லூர்தென்காசிரூ.8

மேலும் பொது மக்களுக்கான மாதந்திர சீசன் டிக்கெட் (திருநெல்வேலி - வீரவநல்லூர்) ரூ.115 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சலுகை விலை சீசன் டிக்கெட்டும் அமல் படுத்தப்பட்டுள்ளது. 

News Summary in English:
We feel very happy to post this news that the Tirunelveli to Shengottai Train has been re-launched on last Friday (Sep 21) as the 3 years of Tirunelveli to Tenkasi broad-gauge works were finished successfully. All the nellai people including the citizens of Veeravanallur are very cheerful to welcome the train as the train tickets as well as the traveling time are too lower than bus.

Train Fares:
Tirunelveli      - Veeravanallur ==> Rs.4
Tirunelveli      - Tenkasi          ==> Rs.12
Veeravanallur - Tenkasi          ==> Rs.8
Tirunelveli      - Veeravanallur ==> Rs.115 (monthly season ticket for public)

Our Sincere Thanks to:

ஞாயிறு, 29 ஜூலை, 2012

வீரவநல்லூரில் சென்னை சில்க்ஸ் நிழற்குடை மற்றும் மரக்கன்றுகள்

வீரவநல்லூரில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிழற்குடை மற்றும் மரக்கன்றுகள் அமைவிருக்கிறது என்ற செய்தி நடப்புச் செய்திகள் கேட்ட வீரவநல்லூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீரவநல்லூர் பயணிகள் பயன்பெறும் வகையில் வீரவநல்லூர் - நெல்லை சந்திப்பு பேருந்து தற்போது பெரியகோவில் வரை வந்து செல்கிறது. அப்பேருந்து காலை, மாலை இரு வேளைகளிலும் வீரவநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து காந்திசிலை, நாற்கால் சதுக்கம் வழியாக பெரியகோவில் வரை சென்று திரும்புகிறது. குறிப்பாக நாற்கால் சதுக்கம் பேருந்து நிறுத்தத்தில் கணிசமான பயணிகள் ஏறி இறங்கி வருகின்றனர். இதனால் அந்த இடத்தில்(2வது வார்டு) பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து வீரவநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 2வது வார்டு கவுன்சிலர் திரு. மாரியப்பன் அவர்கள் எடுத்த முயற்சியால் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மூலம் பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் தலைவர் S.K.பழனிச்சாமி மற்றும் இதர உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் கவுன்சிலர் மாரியப்பன் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் கூடுதல் தகவலாக வீரவநல்லூரில் மரக்கன்றுகள் நட்டு அவற்றைப் பாதுகாக்க இரும்பு வேலிகளும் அமைத்து தர தி சென்னை சில்க்ஸ் நிர்வாகிகள் சம்மதித்துள்ளதாகவும் கவுன்சிலர் மாரியப்பன் நம் தளத்திற்கு தெரிவித்தார்.

வெள்ளி, 25 மே, 2012

வீரவநல்லூர் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் சாதனை


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வில் வீரவநல்லூரை சேர்ந்த மாணவ மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவிதிக தேர்ச்சி பெற்று நம் ஊருக்கு பெருமை தேடித் தந்தனர். அப்பள்ளி மாணவர் பி. எடிசன் காட்லின் 1152 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதலாவது மாணவனாக வந்தார். அவர் அனைத்து பாடங்களிலும் 185 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து (தமிழ்-186, ஆங்கிலம்-186, கணிதம்-191, இயற்பியல்-193, வேதியல்-199, உயிரியல்-197) அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். அவருக்கு அடுத்த படியாக 1143 மதிப்பெண்கள் எடுத்து எஸ்.சொர்ணலதா என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்தார். மாணவி செலின், மாணவர் உதயகுமார் ஆகிய இருவரும் 1118 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர். வீரவநல்லூரில் உள்ள மற்றொரு பள்ளியான பாரதியார் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 85 சதவிகத மதிப்பெண்கள் பெற்றனர். அப்பள்ளியை சேர்ந்த ரஞ்சிதம் என்ற மாணவி 1053 மதிப்பெண்கள் எடுத்து அப்பள்ளியில் முதலிடம் பிடித்தார். தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வீரவநல்லூர் வலைதளம் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வோம்!


வெள்ளி, 27 ஏப்ரல், 2012

வீரவநல்லூரில் யானைக்கால் மாத்திரைகள்




வீரவநல்லூரில் யானைக்கால் நோய் பாதித்தோர் அதிகமாக உள்ளதால் அந்நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. T.E.C (100 mg) மாத்திரைகள் 2 - 5 வயது உள்ளவர்களுக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு 2 மாத்திரைகளும், 15-60 வயதுள்ளோருக்கு 3 மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. அதனுடன் சேர்த்து அல்பண்டோசோல் (400 mg) மாத்திரை ஒன்று வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகளை அனைவரும் உட்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதை உட்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் இம்மாதிரைகள் வயிற்றில் உள்ள