சனி, 31 ஆகஸ்ட், 2013

வீரவநல்லூர் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு

நேற்றைய (23/8/13) வீரவநல்லூர் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், அனைவரின் ஏகோபித்த கருத்தான A.T.M பற்றி எடுத்துரைக்க பட்டது. அதற்கு பதிலளித்த மேலாளர் திரு. அமீர் அவர்கள், பேருந்து நிலையம், மெயின் பஜார் ஆகிய இடங்களில் இடம் பார்ப்பதாகவும், அப்படி கிடைக்கவில்லை எனில் ஜனவரி மாதத்தில் வங்கி அலுவலகத்திலேயே திறக்கப்படும் என கூறினார் . இதை எனக்கு இட்ட கட்டளையாக நினைத்து கண்டிப்பாக செயல்படுவதாகவும் உறுதி அளித்தார். அனைவரும் நன்றி பாராட்டினர்.செய்தி: இசக்கி கண்ணன், வீரை.