சனி, 13 செப்டம்பர், 2014

நிழல்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து...

வீரவநல்லூரைப்பற்றிய கவிதை கண்டிப்பாக எழுதவேண்டும்

முதல்வரியாக ‘அந்தக் காலத்தில் குளத்தில் நீர் இருந்தது’,

இரண்டு மூன்று வரிகளுக்குப் பின்

சண்முகா கொட்டகையையும் காந்திமதி டாக்கீஸையும்.

ஊரின் செழுமைக்கு

சந்தையில் மண்டிக்கிடந்த காய்கறிக் கூழ் கொஞ்சம்.

மழை வர்ணனையும்

தெருவில் திரிந்த பசுக்கள்பற்றிய குறிப்பும் அவசியம்.

ஊர்ச்சாத்திரை, திரைகட்டிப் படம்,

சின்ன வயதில் சைக்கிள் ஓட்டிய கதை,

கூனியூருக்குச் செல்லும் பாதை, சுமைதாங்கிக் கல்,

பள்ளிக்கூடம், பொது நூலகம் எனத் தேடிப் பிடித்து

வார்த்தைகளை வளைத்தால்

வீரவநல்லூரின், எந்தவொரு ஊரின்

பழைய பொதுப்பிம்பம் தயாராகும்.

ஒரு ஊரைக் கவிதையில் சேமிப்பது சுலபம்.

(ஹரன் பிரசன்னா எழுதிய ‘நிழல்கள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து – தடம் வெளியீடு, 4/31 D, மூன்றாவது மெயின் ரோடு, ராயலா நகர், ராமாபுரம், சென்னை – 89, தொலைபேசி: (0)9884279211.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக